2007-11-05

என் முதல் BLOG

அப்படி இப்படி ஒரு சின்ன கடவுள் வாழ்த்து பாடி இந்த BLOGஐ ஆரம்பிச்சாச்சு! இனிமே என்ன எழுதணும், எப்படி எழுதனும்னு முடிவு செய்யணும்!

இது தெரியாம ஏன்டா BLOGஐ ஆரம்பிச்சேன்னு கேட்காதீங்க! ஒரு 'பொறி' (கடலை பொறி இல்லை!) உருவாகிடுச்சுன்னா அப்போ உட்கார்ந்துகிட்டு BLOG create பண்ணினா 'பொறி' ஆறிடும்லே! :o)

சொந்தக்கதை சோகக்கதை எழுதி பெரிய பிளேடு போட விருப்பம் இல்லை.. உருப்படியான எதாவது சரக்கை எழுதலாம்னு பார்க்கிறேன்! இந்த BLOG தமிழ் மற்றும் English ஆகிய இரண்டு மொழிகளிலும் எனது கருத்தை மற்றும் என்னை பிரதிபலிக்கும்!

தட்டிக்கொடுப்பவர்களும் கன்னத்தில் அறைபவர்களும் என்னை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! சமுதாயத்துக்கும் எனக்கும் உண்மையா நடந்துப்பேன் என்கிற நம்பிக்கையில் எனது எழுத்து பிரயாணத்தை தொடங்குகிறேன்...

No comments: